புதன், 22 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 23

      மலைபடுகடாம் – அரிய செய்தி : 23
யானை – முத்து
…………………………… யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
                 பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  518 – 519
குறைவற்ற வலிமையுடைய யானைகளின்  - முத்துக்களைக் கொண்ட தந்தங்கள். “ முத்துடை மருப்பின் மழகளிறு “ – பதிற்றுப். 32
நூறைக் கிழங்கு
நுகம் மருள் நூறை – 515 – நுகத்தடியைப் போன்ற மருட்டும் தோற்றமுடைய நூறைக் கிழங்கு.
தேன் கள்
 திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல் – 522 -  நல்ல மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட முற்றிய தேனால் ஆக்கிய கள்ளின் தெளிவு.
( கயம் – (கஜம்) யானை ; எண்கு – கரடி ; தீர்வை – கீரி ; உழுவை – புலி ;  நூறை – நூறைக் கிழங்கு ; நாகம் – சுரபுன்னை ; ஆரம் – சந்தனம் ; அமை – மூங்கில் ; ஓரி – நீல நிறம் ; இறால் – தேனடை .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக