வியாழன், 30 ஜூன், 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 5

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 5
மக்கள்தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
                                     -தொல். 3: 9: 577
முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ, மகடூஉ மக்கள் எனப்படும். அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுள் சேர்த்திக் கொள்ளவைத்தான் என்பது அவை ஊமும் செவிடும் குருடும் போல்வன. கிளையெனப்படுவார் தேவரும் தானவரும் முதலாயினார் பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மன உணர்வு உடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும் என்பது தாமே எனப் பிரித்துக் கூறினைமையான் நல்லறிவுடையார் என்றற்குச் சிறந்தார் என்பதும் கொள்க.(பேராசிரியர் , உரை)
ஒருசார் விலங்கும் உளவென மொழிப.  – தொல்.3: 9: 578
விலங்கினுள் ஒரு சாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு ; அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. ( இளம்பூரணர், உரை)
                         கிளி, குரங்கு, யானை –ஆறறிவு உடையன எனத் தொல்காப்பியர் வழிநின்று கண்டுபிடித்ததோடு  அம்மூன்றோடு முதலாயின என்றும் கூறுவதன் நோக்கம் யாதெனின் தம் காலத்திற்குப் பின்னே அறிவியல் அறிஞர்கள் வேறு சில விலங்குகளையும் ஆறறிவு உடையன என்று கண்டுபிடிக்கலாமல்லவா..?
                   

 “The ancient Tamils had as profound an understanding of animals and birds as of humans.
Tolkappiyam, in its Marapiyal speaks of the  classifications of all living beings into six groups.

It is the human beings that have six senses;
There are others also of the same class of birth
Tolkappiyam, 1524
In addition to stating that there are other organisms that have six senses like human beings, Tolkappiyar significantly adds,
They say there are animals that have six senses
Tolkappiyam, 1525
While interpreting the  last Nurpa, Ilampuranar observes that besides men and women, there are  other beings like  parrots, monkeys and elephants which are also endowed with six senses.” (Prof. P. Marudanayagam)
parrots, monkeys and elephants which are also endowed with six senses.”
ஈண்டுத் தொல்காப்பியரின் அறிவியல் அறிவும் ; அவர் வரையறுத்த ஆறறிவுக் கோட்பாடும் அக்கோட்பாட்டிற்கு உரைவகுத்த உரையாசிரியர்களின் அறிவியல் அறிவுத் திறனும் போற்றுதற்குரியதன்றோ..!
  தொல்காப்பியரின் கருத்து  அறிவியல் உண்மையெனின்  அதற்குச் சான்று வேண்டுமே….   தொடரும் …………… 

1 கருத்து: