வியாழன், 25 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 338

திருக்குறள் – சிறப்புரை : 338
 உறவாடும் நட்பு
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. – 338
உடம்புக்கும் உயிருக்குமான நட்பு  -- கூட்டுக்குள் உண்டு உறங்கி உறைந்த பறவை காலம் வந்துற்றபோது கூட்டைவிட்டுப் பறந்தோடுவதைப் போன்று உடம்பைவிட்டு உயிர் பிரிந்தோடும்.
“ இது என வரைந்து வாழ்நாள் உணர்ந்தோர்

  முதுநீர் உலகின் முழுவதும் இல்லை “ – (சிலம்பு.)

1 கருத்து: