திங்கள், 29 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 341

திருக்குறள் – சிறப்புரை : 341
35. துறவு
அரிச்சுவடி
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். – 341
ஒருவன் யாதொன்றின் மீது பற்றின்றி விலகியிருக்கிறானோ அவனுக்கு அஃதொன்றால் துன்பம் விளைவதில்லை. பற்றினால் துன்பம் பற்றும்.
துறவுக்கு முதற்பகை ஆசையே.         

1 கருத்து: