புதன், 9 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 616

திருக்குறள் – சிறப்புரை : 616
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். ---- ௬௧௬
இடைவிடா முயற்சியால் மேற்கொள்ளும் செயல் திருவினையாகிய வாழ்வில் வளம் சேர்க்கும்  முயற்சியற்றவர் வாழ்வில் உள்ள வளம் ஒழிய வறுமை வந்து சேரும்.
“ வினைநயந்து அமைந்தனை ஆயின் மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம் வல்லே.” – அகநானூறு.
 “நெஞ்சே !பொருள் ஈட்ட விரும்பி வந்தனையாகலின் தலைவி மகிழும் வண்ணம் பலவகையான செல்வங்களை ஈட்டிச் செல்வோம்.” – தலைவன்.


1 கருத்து: