சனி, 2 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 640

திருக்குறள் – சிறப்புரை : 640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.---- ௬௪0
திறமை இல்லாதார், ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழிமுறைகளை நன்கு அறிந்திருந்தபோதும் நிறைவாகச் செய்து முடிக்க இயலாது அரைகுறையாகச் செய்து முடிப்பர்.
” செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும்.” ---நற்றிணை.

தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது, இடையில் நிறுத்திவிடுவது, இழிவைத்தருவதோடு,  அறியாமையையும் வெளிப்படுத்தும்.

1 கருத்து: