ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 660

திருக்குறள் – சிறப்புரை : 660
 சலத்தால் பொருள்செய்து  ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.--- ௬௬0
நேர்மையற்ற முறையில் பொருள் ஈட்டி அதனைப் பாதுகாத்தல் என்பது பச்சை மண் பானயில் நீரை ஊற்றிப் பாதுகாப்பது போலாகும்.
“ கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்.” –கலித்தொகை.
உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக்குவித்த செல்வங்கள், மக்களப் பாதுகாக்க முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்..


1 கருத்து: