வியாழன், 29 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :831


84. பேதைமை
திருக்குறள் -சிறப்புரை :831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.--- ௮௩௧
பேதைமை என்பது யாதென்றால் தனக்குக் கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் தருவனவற்றைக் கைநழுவ விடுதலாகும்.
(பேதைமை – அறியாமை – கூறுகெட்டவன்)
“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.” ---குறள்.428.
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமை ; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையார் செயல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக