திங்கள், 25 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 72


தன்னேரிலாத தமிழ் - 72

அன்னம் அனையாய் குயிலுக்கு ஆன அழகு இன்னிசையே
கன்னல் மொழியார்க்கு அழகு கற்பாமே மன்னு கலை
கற்றோர்க்கு அழகு கருணையே ஆசை மயக்கு
அற்றோர்க்கு அழகு பொறையாம்.” –நீதிவெண்பா.

குயிலுக்கு அழகு அதன் இனிய குரலோசை ; இனிக்கும் மொழியுடைய பெண்களுக்கு அழகு கற்பு ; கற்றோர்க்கு அழகு கண்ணோட்டம் ; ஆசையை வென்றவர்களுக்கு அழகு பொறுமையாம்.


1 கருத்து: