வெள்ளி, 22 ஜனவரி, 2016

3. சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி

3.  சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி
               ஆசிரியர் : இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
சிறுபாணாற்றுப்படை – ஒய்மாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்று மீளும் சிறுபாணன் ஒருவன் வழியில்கண்ட  வறுமையுற்ற பாணன் ஒருவனை ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது.
சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 1
நட்ட பாடை  - பண்
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 34 - 37
பொற்கம்பியையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய  சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி  நட்டபாடை என்னும் பண்ணைப் பாலை யாழில் இசைக்கவல்ல பாணன் முறைமை அறிந்து இசைக்க…
( சீறியாழ் – சிறிய யாழ் ; நைவளம் – நட்டபாடை என்னும் பண் ; பழுநிய – முற்றுப்பெற்ற ; கடனறிந்து – முறைமையறிந்து.) ..தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக