ஞாயிறு, 3 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 4

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 4
1.  திருச்சீரலைவாய் – திருச்செந்தூர்
யானை வாகனம்
வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை
கூற்றத் தன்ன மாற்றுஅரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டு
நக்கீரர். திருமுரு. 1: 78 – 83
கூரிய அங்குசத்தால் குத்தப்பெற்ற தழும்புகள் நிறைந்த செம்புள்ளிகள் மிக்குடைய மத்தகத்தில் – பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய – தாழ்ந்து தொங்கும் மணிகள் மாறி மாறி  ஒலிக்கின்ற பக்கங்களையும் – விரைவான நடையினையும் – கூற்றுவனை ஒத்த வலிமையினையும் – ஓடும்போது காற்று எழுந்து செல்வது போன்ற வேகத்தையும் உடைய யானையின் மீதேறி – முருகன் வருகின்றான். ( முருகன் யானைக் கொடி உடையோனை வென்று அடக்கியதால் யானை ஊர்தியாகி இருக்கலாம்.- ஆய்க) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக