ஞாயிறு, 31 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 10

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 10
ஓரி
………………….. நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் …..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 107 – 111
                       செறிந்த கொம்புகளில் நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னைகளையும் குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்தவனும் –  காரி என்னும் பெயர்பெற்ற குதிரையை உடைய காரி என்பானோடு போர் செய்தவனும் ஆகிய ஓரி என்னும் வள்ளலும்…..
 ஈண்டுக் குறிப்பிட்ட -  பேகன். பாரி. காரி. ஆய். அதிகன். நள்ளி. ஓரி ஆகியோர் கடையெழு வள்ளல்கள் ஆவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக