வெள்ளி, 29 ஜனவரி, 2016

அதிகன் - 8

அதிகன்
…………………….. மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகனும் ……..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 99 – 103
                            பெரிய மலையினது சாரலில் நின்று – அழகுபெற்ற நெல்லியினது அமிழ்தத் தன்மையுடைய கனியைத் தான் நுகர்ந்து ; தன் உடம்பிற்கு ஆக்கம் செய்து கொள்ளாமல் ஒளவைக்குக் கொடுத்தவனும் -  கொற்றவையின் சினம் திகழும் ஒளிமிக்க வேலையும் ஆரவாரிக்கின்ற கடல்போன்ற படையினையும் உடைய அதிகன் என்னும் வள்ளலும்…… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக