திங்கள், 7 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :869


திருக்குறள் -சிறப்புரை :869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.--- ௮௬௯
(சேண் இகவா)
அறிவற்ற, எதற்கும் அஞ்சும் இயல்புடைய ஒருவனின் பகையைப் பெற்றால் அப்பகையைப் பெற்றவர்க்கு இன்பம் வெகுதொலைவில் இல்லை.
“ ……  ……. ….. ……………. நுண் நூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.” ---நாலடியார்.
நுட்பமான நூல்களைக் கற்று அறிவு பெறாத  பயனற்றவர்களுடன்  உறவாடல் நரகங்களுள் ஒன்று.
(அறிவற்றவர் நட்பு நரக வேதனையைத் தரும்.)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக