சனி, 27 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1032


திருக்குறள் -சிறப்புரை :1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. --- ௧0௩௨

உழவுத் தொழில் செய்ய இயலாது பிற தொழில் செய்வாரையும் உழவர்கள் உணவளித்துக் காப்பதால், உழவர்கள் உலக மக்களின் உயிர் வாழ்க்கைக்குத் தேர்ச் சக்கரத்தைக்காக்கும் அச்சாணி போன்றவர்கள்.

“ குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்றிவைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது “ –சிறுபஞ்சமூலம்.

குளம் வெட்டி, கரைமேல் மரங்களை நட்டு, மக்கள் செல்ல வழி அமைத்து, தரிசு நிலங்களைச் செப்பம் செய்து, உழுவயலாக்கி, நீர் வளம் நிறைந்த இடத்தில் கிணறு உண்டாக்கி, ஆகிய இவ்வைந்து அரிய செயல்களைச் செய்தவன் சுவர்க்க உலகத்திற்கு இனிதாகச் செல்வான்.

1 கருத்து: