செவ்வாய், 5 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…24.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…24.

ஒளவையார் அருளிய மூதுரை

குணமும் தொடர்பும்

‘நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்

காக்கை உகக்கும் பிணம்.”

 

தாமைஅப் பூவை அன்னம் சேர்ந்தாற்போல, கற்றவரைக் கற்றவரே விரும்புவர். இடுகாட்டில் உள்ள பிணத்தைக் காக்கை விரும்புவது போல, கல்வியில்லாத மூடரை மூடரே விரும்புவர்.  

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய

கற்றலின் காழினியது இல்.” – பூதஞ்சேந்தனார்; இனியவை நாற்பது, 40.

பற்பல நாளும் வீணே கழியாது, பயனுள்ள நூல்களைக் கற்பதைப் போல் இனிமை உடைய செயல் வேறு எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக