புதன், 13 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…32.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…32.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

 

“ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்

இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்

என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது.”

 

வயிறே ..! என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறாய்..? ஒரு நாளக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் இன்று உணவை விட்டுவிடு என்று சொன்னால் விடமாட்டாய் ;  உணவு வேண்டுமளவு கிடைத்த போது இரண்டு நாளைக்குச் சேர்த்து எடுத்துக்கொள் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டாய் ; உணவுக்காக நான் படும் துன்பங்களைச் சிறிதும் நீ அறிய மாட்டாய் ; ஐயோ…! உன்னோடு வாழ்தல் மிகவும் கொடுமையாக இருக்கிறதே, நான் என்ன செய்வேன்…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக