வியாழன், 14 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…33.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…33.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்னே – ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறுஓர் பணிக்கு.”

 

ஆற்றங்கரை ஓரத்தில் நிற்கும் மரமும் என்றாவது ஒரு நாள் மண் அரிக்க வீழும். அரசாட்சி போன்ற பிற உயர்ந்த பணிகளும் குற்றம் உடையதாகி அவையும் ஒரு நாள் வீழும் ; இவை எல்லாம் போற்றுதற்குரியன ஆகா. ஆனால் என்றும் பெருமைக்கும் போற்றுதலுக்கும் ஒப்பில்லாத  உயர்ந்த வாழ்வாவது உழுதுண்டு வாழும் வாழ்க்கையே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக