வெள்ளி, 8 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…27.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…27.

ஒளவையார் அருளிய மூதுரை

துன்பம் செய்வார்க்கும் இன்பம் செய்தல்.


“சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்

குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

ஒருவன் தன்னை வெட்டும் போதும் அவனுக்கு நிழல் தந்து வெயிலை மறைக்கும் மரம். அதுபோல் அறிவுடையோர் தமக்குத் தீங்கு செய்பவர்க்கும் தம்மாலான உதவியைச் செய்வர்.

 

இணைப்பு:

”இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.” குறள்; 987.

 தமக்குத் தீங்கு இழைத்தவர்க்கும் இனியவை செய்து உதவாவிட்டால் சான்றோரின் மேன்மைப் பண்பு  வேறு என்ன பயனை உடையது.?

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக