செவ்வாய், 19 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…37.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…37.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்

கேடுகெட்ட  மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டிங்கு

ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பர்

பாவிகாள் அந்தப் பணம்.”

பாடுபட்டு உழைத்துச் சேர்த்து வைத்த பணத்தை, தாமும் உண்ணாமல், பிறருக்கும் கொடுத்து உதவாமல் மறைத்து வைக்கும் பாவிகளே..! நீங்கள் இறந்தபின் அந்தப் பணத்தை யார் சொந்தம் கொண்டாடுவர்…. யார் அனுபவிப்பர்..?

 

செல்வம் எல்லாம் சேர்த்தாலும்

சுவரு வைத்துக் காத்தாலும் –நீ

செத்த பின்னே அத்தனைக்கும்

சொந்தக்காரன் யாரு?

துணிவிருந்த கூறு..! ரொம்ப

பெரியவரும் எளியவரும்

எங்கே போனார் பாரு..!— மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக