புதன், 20 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…38.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…38.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.”

 

வரவுக்கு மீறி அதிகமாகச் செலவு செய்பவன், வரவு அறிந்து வாழத் தெரியாதவன், தன் கையிருப்பும் விரைந்து கரைந்துபோக,  மானமும் அறிவும் கெட்டுப் பழி பவங்களுக்கு ஆளாகிக் கடனாளியாகித் துன்புறுவான்.வரவறிந்து வாழத் தெரியாதவன் வாழ்க்கை நரக வாழ்க்கையாக ஏழ்பிறப்பும் தீமை புரிந்தவனாய், திருடனாய், நல்லாரும் வெறுத்து ஒதுக்கக் கூடிய இழி நிலை அடைந்து அழிவான்.

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும். –குறள். 479.

 

 தன் கைப்பொருள் அளவு அறிந்து  வாழாதவன் வாழ்க்கை எல்லாம் (மாடி, மனை, கோடி பணம் , மனைவி, மக்கள் மகிழ்ச்சி, சூழும் சுற்றம்…… ) இருப்பதுபோல் தோன்றி எதுவும் இல்லாமல் மறைந்து அழியும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக