வெள்ளி, 15 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…34.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…34.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.”  -குறள்;969.

பனி மலையில் வாழும் கவரிமா என்னும் விலங்கு,செழித்து வளர்ந்துள்ள முடியைப் போர்வைபோல் கொண்டிருக்கும். அம்மயிர்ப் போர்வை அதன் உடலைவிட்டு நீங்கிவிட்டால் அவ்விலங்கால் உயிர் வாழ இயலாது இறந்துபடும். அதுபோல் மானம் உடையோர்  தன்மானம் இழக்க நேரிட்டால் தாம் மானம் இழந்து வாழ விரும்பாமல் தம் இனிய உயிரையே விட்டுவிடுவர்.

” பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்

இச்சைபல சொல்லி  இடித்துஉண்கை – சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர்விடுகை சால உறும்.”

 

 தான் உயிர் வாழப் பிச்சை எடுத்து உண்பதினும் இழிவானது பிறரிடத்தில் நல்லவன் போல் நடித்து,  அவர்தம் மனத்தை இளகுமாறு பேசி தன்மானம் இழந்து கையேந்தி வாங்கி உண்ணுதலாம்.  இப்படி மானம் இழந்து உயிர் வாழ்வதைவிட உயிரைவிட்டு  மானத்தோடு வாழ்தல் நன்றாம்.

2 கருத்துகள்:

  1. மானம் இழிந்த நிலையில் வாழ்வதே முக்கியம் என்று கருதுவோர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன!

    பதிலளிநீக்கு