வியாழன், 7 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…26.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…26.

ஒளவையார் அருளிய மூதுரை

நால்வகை எமன்கள்

“கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்

அல்லாத மாந்தர்க்குக் அறங்கூற்றம் – மெல்லிய

வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம் கூற்றமே

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.”

 

படியாதவர்க்கு படித்தவரின் உறுதி மொழிகளும், அறநெறியில் நில்லாதவர்க்கு அறமும். வாழை மரத்திற்கு அது ஈன்ற காயும், கணவனுக்கு இல் வாழ்க்கையில் ஒத்து நடவாத மனைவியும் எமன்களாகும்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றமே

இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்.” –விளம்பிநாகனார், நான்மணிக்கடிகை;82.

 

தீமைகள் செய்வார்க்கு அறக்கடவுளே எமன்; வீட்டில் இருந்து கொண்டே கள்ள உறவு கொள்பவள் கணவனுக்கு எமன் ஆவாள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக