வியாழன், 21 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…39.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…39.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் போம் பறந்து.”

 

பெருமைக்குரிய குணங்களைக் கொண்டு நல்லவனாக வாழ்ந்து வருபவனாயினும் ; வறுமையில் துன்புறும் நிலை வருமேயானால் , அவன் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்த , மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, பதவி, தவம், உயர்வு, தொழில் முயற்சி, காதல் ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்துபோகும்.

 

‘பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே” –புறநானூறு.173.

பசி நோயைத் தீர்க்கும் மருத்துவனாகிய சிறுகுடி பண்ணனின் இல்லம் அருகிலா….தொலைவிலா…? கூறுங்கள் எமக்கே.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக