செவ்வாய், 26 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…43.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…43.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவுங் கோல் பஞ்சிற் பாயாது – நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.”

 

வலிமை உடைய யானையின் உடலில் பாயும் அம்பு, மெல்லிய பஞ்சிப் பொதியுள் பாயாது ;  பாரையால் பிளக்க முடியாத கருங்கல் பாறை  வளரும் மரத்தின் வேருக்குப் பிளந்து விடும். அதுபோல்,  இனிய சொற்களைக் கடுஞ் சொற்கள் வெல்வதில்லை; இனிய சொற்களே என்றும் வெல்லும்.  

 

“ ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்

காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.”– சமண முனிவர்கள்; நாலடியார்,7.

:3

பல நூல்களையும் ஆராய்ந்து, அறநூல்கள் கூறும் வழியிலே நின்று, உயர்ந்தோரிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார் எந்நாளும் சினந்து கடுஞ் சொற்களைக் கூறமாட்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக