சனி, 23 டிசம்பர், 2023

“இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…40.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…40.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண் புதைந்த

மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் 

சாந்துணையும் சஞ்சலமே தான்”

எங்கே நிம்மதி….எங்கே நிம்மதி…அங்கே எனக்கோர் இடம் வேண்டும்=  இப்படி ஏங்கும் மனம் யாரிடம் தான் இல்லை?

ஒரு நாளில் உண்பது ஒரு படி அரிசிச் சோறு ; உடுப்பது நான்கு முழ ஆடை;  ஆனால் மனம் எண்ணுவதோ எத்தனை கோடி நினைவுகள் ;  இருப்பதை விடுத்துப் பறப்பதைப் பிடிக்க எண்ணித் துன்புறும் மக்களே..!,  அமைதி இல்லாமல் சாகும் வரை துன்பத்தில் உழல்வதுதான் வாழ்க்கையோ…? மனமே !  ’செல்வம்  என்பது  சிந்தையின் நிறைவே ’என்பதை அறிந்து வாழ்வாயாக..!

 

”கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு

அகறல் ஓம்புமின் அறிவுடையீர்…..” – காமக்கணிப் பசலையார், நற்றிணை.;243.

 

அறிவுடையீர்..! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல நிலையில்லாத வாழ்க்கையின் பொருட்டுப் பொருளைத் தேடி, அருமையான நுங்கள் காதலியரை விட்டுப் பிரியாது கலந்தே இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக