செவ்வாய், 12 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…31.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…31.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

 

”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மாநித்தீர் – வேண்டா

நமக்கும் அதுவழியே நாம் போமளவும்

எமக்குஎன்  என்று இட்டுண்டு இரும்.”

 

 அவர் இறந்துவிட்டார் என்று வருந்தி எத்தனை ஆண்டுகள் அழுது புரண்டாலும் இறந்தவர் மீண்டு எழுந்து வரமாட்டார்; நாமும் என்றாவது ஒருநாள் இறப்பது உறுதி. ஆதலால் நம் வாழ்நாள் முடிவதற்குள் நாமும் நன்றாக உண்டு,  கவலையற்று அறவழி நின்று பிறர்க்கு உதவி செய்து வாழ்தலே பெருமைக்கு உரியதாகும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக