புதன், 6 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…25.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…25.

ஒளவையார் அருளிய மூதுரை

”மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.”

 

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் சிறப்பு உண்டு. கற்றோர்க்கு அவ்ர் செல்லும் எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டு. ஆதலால் மன்னனினும் கற்றவர்க்கே சிறப்பு மிகுதி.

 

இணைப்பு:

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்

நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந்நாடு

வேற்று நாடு ஆகா தமவே ஆம்…” – முன்றுறை அரையனார், பழமொழி,55.

 

 ஆன்ற கல்வி அறிவுடையார் தம் சொல் செல்லாத நாடு நான்கு திசைகளிலும் இல்லை; அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா  அவையும் அவருடைய நாடுகளேயாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக