ஞாயிறு, 10 டிசம்பர், 2023

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…29

ஒளவையார் இயற்றிய நல்வழி.

உயிரை விட உயர்ந்தது ஒழுக்கம்

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்தவாயினும் ஊழ்

கூட்டும் படயன்றிக் கூடாவாம் – தேட்டம்

மரியதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.”

 பல் வேறு வழிகளில் பொருளைத் தேடிச் சேர்த்துவைத்தாலும்  நமக்கு எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவுதான் கிடைக்கும்,  மனமே…! தேடிய பொருள் அனைத்தும் நிலையற்றது. இன்று உனக்கு ; நாளை இன்னொருவனுக்கு என்பதை மறவாதே. ஆதலால் என்றும் நிலையாக நின்று நல்ல பெயரைப் பெற்றுத்தருவது நல்லொழுக்கம் ஒன்றே. எனவே ஒழுக்கத்தை உயிரெனப் போற்றுவாயாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக