சனி, 9 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…28.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…28.

ஒளவையார் இயற்றிய  -  நல்வழி.

உயர் குலம் இழி குலம்

“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையின் – மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.”

“ துன்பப்படுவோர்க்கு கொடுத்து உதவுபவர் உயர் குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த குலத்தவர் ஆவர்.

உண்மை நூலில் சொல்லப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.  ஆதலால் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை.

 

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

இணைப்பு:

 

“ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று..” –கழைதின்யானையார், புறநானூறு.204.

  

எனக்கு ஏதேனும் உதவி செய் என்று இரப்பது இழிவானது; அப்படி இரப்பவர்க்கு ஒன்றும் கொடுக்காது இல்லை எனக் கூறுவது அதைவிட இழிவானது.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக