திங்கள், 25 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…42.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…42.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக

உண்ணீர்மை வீறும் உயர்ந்து.”

 

 அறம் :  நன்றே செய்க ; இன்றே செய்க ….!

 

ஆற்று வெள்ளத்தினால் உண்டாகும் மேடும் பள்ளமும் போல நாம் வாழுங்காலத்து உயர்வு வரும்போது செல்வமும் பெருகும் ;  தாழ்வு நேரும் போது குறையும் . ஆதலால்  இல்லாதார் நம்மிடம் வந்து உயிர் வாழ உதவி கேட்பார்கள் அவர்களுக்கு இல்லை என்று கூறாது  சோறு போடுங்கள், தண்ணீரும் கொடுங்கள், இத்தகைய அறச்செயலே, கருணையே நம்மனத்தை மாண்புடையதாக்கும்.

 

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி- குறள் ; 226.

 

வாடும் வறியவரின் கடும் பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே  பொருள் பெற்ற ஒருவன், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

சேர்த்த பொருளைப் பெட்டியில் மறைத்து வைக்காது ; பசியோடு வருவாரின்  வயிற்றை உன்  பொருள் வைக்கும் இடமாகக் கொண்டால்  (உணவு கொடுத்து)  பிற்காலத்தில் உன் பெயர் விளங்கும் பேறு பெருவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக