வியாழன், 16 ஏப்ரல், 2015

சங்க இலக்கியச் செய்திகள்

- மக்கட்பேறு
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என
முன்னும் அறிந்தோர் கூறினர் ...
           உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.28 : 1 – 6
சிறப்பில்லாத குருடும் வடிவற்ற தசைப் பிண்டமும் கூனும் குறுகிய தோற்றமும் ஊமையும் செவிடும் விலங்கு வடிவிலான தோற்றமும் அறிவின்றி மயங்கி இருப்பதும் ஆகிய எட்டுப் பெரிய குறைபாடுகள் மக்கள் பிறப்பில் உள்ளன. இவை, இவ்வுலகில் வாழ்வார்க்குப் பேதைத் தன்மையிலான பிறப்புகள், இவற்றால் யாதொரு பயனும் இல்லை என  நன்கு அறிந்தோர் முற்காலத்தில் கூறினர்.
இன்றைய குழந்தைகள்நல மருத்துவ அறிவியலோடு ஒப்பிடவும்.
அறிவியல் வளர்ச்சியில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து ஆய்க.

முதன்மை நோக்கு : அறிவியல் அணுகுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக