திங்கள், 27 ஏப்ரல், 2015

கற்பழிப்பு- தண்டனை

– கற்பழிப்பு- தண்டனை-
கரும்பு அமல் படப்பை பெரும்பெயர்க் கள்ளூர்
திரு நுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
                           மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், அகம்.256 : 15 – 20
கரும்புத் தோட்டம் நிறைந்த கள்ளூர்- நெறிதவறிய  அறமிலி ஒருவன் இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தினைக் கவர்ந்து உண்டான், பின்னர் அவளை அறியேன் என்று அறவோர் முன் பொய் உரைத்தான். அவர்தம் சேர்க்கையை அறிந்தார்வாய்க் கேட்டறிந்த அவையத்தார்  அவனைத் தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின்  மூன்று கவர்த்த கிளைகளின் நடுவே இறுகக் கட்டி வைத்து, அவன் தலையில் நீற்றினைசாம்பல்பெய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக