திங்கள், 13 ஏப்ரல், 2015

சிறுகதை
விஞ்ஞானபீட விருது
அவர் ஒன்றும் பெரிய விஞ்ஞானி இல்லை.ஏவுகணயெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. இருந்தாலும் தத்துவமேதை சங்கரனுக்கு இந்திய அரசு விஞ்ஞானபீட விருது அளித்தது இந்தியாவில் சம்பந்தா சம்பந்தமில்லாமல்கொடுப்பதற்குத்தானே விருது என்று பெயர்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ மேதை என்பதை அவரை பார்த்த உடனேயே பாமரன் கூடத் தெரிந்து கொள்வான். நீண்ட நரைத்த சுனாமி வாரி சுரிட்டிய கீச்சாங்குப்பம் போலத் தலைமுடி.குழி  விழுந்த கூர்மையான கண்கள்...இந்தப் பார்வை ஏவுகணை போலப் பாயும் என்பதால்தான் இவருக்கு விஞ்ஞானபீட விருது கொடுத்தார்கள் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் “பிரசங்கித்தார்கள். வெள்ளை ஜிப்பாக்குள்ளே ஒளிந்துகொண்ட மெல்லிய உடல்முருங்கை மரம்போல உயரம்...ஒரு தத்துவ மேதைக்கு இந்த அழகு போதாதா..?  (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக