சனி, 2 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :894


திருக்குறள் -சிறப்புரை :894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். ---- ௮௯௪
ஆற்றல் இல்லாதார் சான்றோரை இழித்தும் பழித்தும் துன்புறுத்துவது,  இறுதிக்காலத்தில் தானேவரும் இயமனை முன்னதாகவே கை தட்டி அழைப்பது போன்றதாகும்.
“ அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்
  பெருமை உடையார் செறின்.” ----நாலடியார்.
பெருமை உடைய சான்றோர் சினந்தால், பிழை செய்தவர் புகுதற்கு அரிய கோட்டைக்குள் புகுந்தாலும் தப்பிப் பிழைத்தல் இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக