ஞாயிறு, 17 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :909


திருக்குறள் -சிறப்புரை :909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.--- ௯0௯
அறச் செயல்கள் ஆற்றலும் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டலும் பொதுத் தொண்டாகிய பிற நற்செயல்கள் செய்தலும் பெண் ஏவல் செய்பவர்களிடத்தில் இல்லை.
“ முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
 வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே.” ---பட்டினப்பாலை.
நெஞ்சே…! அரிய பெரிய சிறப்பு வாய்ந்த காவிரிப் பூம்பட்டினத்தைப் பெறுவதாயிருந்தாலும் நீண்ட கரிய கூந்தலையும் ஒளி பொருந்திய அணிகலன்களையும் உடைய என் காதலியைவிட்டுப் பிரிந்து பொருள் தேடச் செல்ல மாட்டேன்……வாழிய என் நெஞ்சே.-தலைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக