ஞாயிறு, 3 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :895


திருக்குறள் -சிறப்புரை :895
யாண்டுச்சென்று  யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். ---- ௮௯௫
(உளர் ஆகார் ; வெந் துப்பின் )
மிக்க வலிமையுடைய அரசனின் சினத்திற்கு ஆட்பட்டவர்கள் எங்கு சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும் அவர்கள் தப்பிப் பிழைக்க மாட்டார்கள்.
“ துஞ்சு புலி இடறிய சிதடன் போல
 உய்ந்தனன் பெயர்தலோ அரிதே…” --- புறநானூறு.
சோழன் நலங்கிள்ளியை எதிர்ப்போர், உறங்கும் புலியைக் காலால் இடறிய பார்வையற்றவன் போல, உயிர் பிழைத்தல் அரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக