திங்கள், 25 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :917


திருக்குறள் -சிறப்புரை :917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்.---- ௯௧௭
நிறைந்த ஒழுக்கம் இல்லாதவர்கள், பொருள் வேட்கையால்  தன் உடலை விலை பொருளாக்கிப் பிறரைச் சேரும் பொதுமகளிரின் தோள் தோய்வர்.
“பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகார்.”---மணிமேகலை.
கற்பொழுக்கம் இல்லாத பெண்டிர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும் உயர்ந்தோர் உலகம் புகமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக