திங்கள், 11 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :903


திருக்குறள் -சிறப்புரை :903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.----- ௯0௩
ஆண்மகனுக்குரிய இயல்புக்கு மாறாக மனைவியிடத்து அஞ்சி நடக்கும் தன்மை ஒருவனிடத்தில் இருக்குமானால் அவன் நல்லவர்கள் முன் தோன்றுவதற்கே வெட்கப்படுவான்.
“ மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியது ஓர் காடு.” –நாலடியார்.
விரும்பத்தக்க பண்புகளை உடைய நல்ல மனைவியைப் பெறாதவன் வீடு, கண்கொண்டு பார்க்க முடியாத ஒரு பாழும் காடாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக