வியாழன், 14 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :906


திருக்குறள் -சிறப்புரை :906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். ---- ௯0௬
  மனைவியைத் தழுவி இன்புறும் காம விருப்பினால் அவளுக்கு அஞ்சி நடப்பவர்கள், இந்திரர் போன்று குறைவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாராயினும் அவர்கள் பெருமைக்கு உரியவர் அல்லர்.
“முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
இந்திரனாக எண்ணி விடும்.” –நாலடியார்.
முந்திரியின் அளவுக்கு மேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின், கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.


1 கருத்து: