புதன், 13 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :905


திருக்குறள் -சிறப்புரை :905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். ---- ௯0௫
மனைவிக்கு அஞ்சி அடங்கி நடப்பவன்  எக்காலத்தும்  நல்லவர்களுக்குக்கூட நன்மையானவற்றைச் செய்ய அஞ்சுவான்.
இவன், நல்லவர்கள் போற்ற வாழும் தகுதியற்றவனாவான்.
“ பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ.” –மணிமேகலை.
பொய்யான நெறியில் ஒழுகும் ஒழுக்கத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள் துன்பத்தினின்று நீங்கித் தப்பித்தார் என்பதும் உண்டோ..? இல்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக