சனி, 30 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :922


திருக்குறள் -சிறப்புரை :922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சன்றோரான்
எண்ணப் படவேண்டா தார். --- ௯௨௨
கள் உண்ணாதே. நல்லவர்கள் உன்னை  மதிக்கப்படவேண்டாம் என்று எண்ணினால் குடித்து விட்டுப் ( மடிந்து ) போ.
“ கள்ளார் கள் உண்ணார் கடிவ கடிந்து ஒரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார் – தள்ளியும்
வாயிற் பொய் கூறார் வடுவரு காட்சியார்
சாயில் பரிவது இலர்.” --- நாலடியார்.
குற்றமற்ற அறிவுள்ளவர்கள் திருடார், கள் குடியார், தள்ளத்தக்கவைகளைத் தள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார், வாய்தவறியும் பொய் கூறார், வறுமை வந்துற்றபோதும் வருந்தும் தன்மை இல்லாதவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக