வெள்ளி, 8 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :900


திருக்குறள் -சிறப்புரை :900
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.---- ௯00
மனிதருள் யாவரும் போற்றத்தக்க சிறப்புகள் உடைய சான்றோரின் சீற்றத்திற்கு ஆட்பட்டவர், எவ்வளவு பெரிய படை வலிமை பொருந்தியவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.
“மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.”—புறநானூறு.
 தலைவனே…! மக்களைக் காக்கும் பொறுப்பினை உணராது, அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக