புதன், 4 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 670

திருக்குறள் – சிறப்புரை : 670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. – ௬௭0
எந்தவகையான செயல்திறன் பெற்றவராயிருந்தாலும் செய்து முடிக்கும் திறனாகிய மனவலிமை இல்லாதவரை இவ்வுலகம் ஏற்றுப் போற்றாது.
“ கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.” –குறள். 578.

 தத்தம் கடமையாகிய தொழில் கெடாமல், கருணை உடையவராக இருக்க வல்லவருக்கு, உரிமை உடையது இவ்வுலகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக