ஞாயிறு, 1 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 667

திருக்குறள் – சிறப்புரை : 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தோர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. --- ௬௬௭
உருண்டோடும் பெரிய தேருக்கு உதவியாக இருப்பது சிறிய அச்சாணியே.  அதுபோலச் செயல்திறன் மிக்கோர் பலர் உளர்.  ஒருவரின் உருவத்தைக்கொண்டு யாரையும் இகழ்ந்து விடக்கூடாது. 
“ இகழ்தலின் கோறல் இனிதே மற்று இல்ல
 புகழ்தலின் வைதலே நன்று.” –நாலடியார்.
ஒருவரை வெறுத்து, அவர் மனம் புண்படி வசை மொழிகளைக் கூறுவதைவிட, அவரைக் கொன்றுவிடுவது நன்றாம் ; ஒருவரிடத்தில் இல்லாத குணங்களை இருப்பதாகச் சொல்லிப் புகழ்வதைவிட, அவரை நேரடியாக வைதலே நன்றாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக