ஞாயிறு, 8 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 674

  திருக்குறள் – சிறப்புரை : 674
வினைபகை என்றஇரண்டின் எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத் தெறும்.--- ௬௭௪
செய்து முடிக்க வேண்டிய செயல், ஒழிக்க வேண்டிய பகை இவ்விரண்டையும் முழுதும் நிறைவேற்றாமல் மிச்சம் வைப்பது ; தீயை முழுதும் அணைக்காமல் எஞ்சிய சிறு தீயானது வளர்ந்து அழிப்பதைப் போல, வளர்ந்து கெடுக்கும்.
“ நன்றி விளைவும் தீதொடு வரும் ..” –நற்றிணை.

நன்மை கருதிச் செய்யும் செயல், தீமையாய் முடிவதும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக