சனி, 14 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 680

திருக்குறள் – சிறப்புரை : 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வார் பெரியார்ப் பணிந்து. --- ௬௮0
தாம் ஆளும் நிலம் சிறிதாக உடையவர் (குறுநிலமன்னன்) பகைவரால் தம் மக்கள் நடுங்குதற்கு அஞ்சி ; பெருநில மன்னனோடு இணங்கிச்செல்லவே முற்பட்டு  அம்மன்னனைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.
”பற்றா மக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்.” –ஆசாரக்கோவை.

பகைவரே ஆயினும் அவர்களுடன் பகையும் கலகமும் கொள்ளாது விலகுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக