ஞாயிறு, 24 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :916


திருக்குறள் -சிறப்புரை :916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். ---- ௯௧௬
யாவரையும் ஈர்க்கவிரும்பி ஆடல், பாடல், அழகு என்ற மூன்றினாலும் தன் உடலை விலைகூறி விற்கும் பொதுமகளிரின் தோளினை, நல்லொழுக்கத்தைப் பேணும் சிறந்த அறிவுடையோர் விரும்பார்.
“இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு”---பழமொழி.
ஒழுக்கம் இல்லாததைக் காட்டிலும் மிக்கதோர் இழிவும் இல்லை ; ஒழுக்கத்தைவிட மிக்கதோர் உயர்வும் இல்லை.

1 கருத்து: