சனி, 8 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1308


 திருக்குறள் -சிறப்புரை :1308

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. ----0

இவர் நமக்காக வருந்தினார் என்று அறிந்து, தாம் வருந்தும் காதலர் இல்லாதவிடத்து, நாம் வருத்தப்படுவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது..?

சென்ற காதலர் வந்தினிது முயங்கிப்
பிரியாது ஒருவழி உறையினும் பெரிதழிந்து
உயங்கினை மடந்தை என்றி தோழி
அற்றும் ஆகுமஃது அறியாதோர்க்கே
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பிலங்கடையே.” ----நற்றிணை.

 தோழி…! அரிய நெறியில் பிரிந்துசென்ற காதலர், மீண்டுவந்து இனிதாக நின்னை முயங்கி நீங்காது நீங்கள் இருவரும்  ஓரிடத்தே வாழும் பொழுது, நீ பெரிதும் நெஞ்சழிந்துமடந்தையே ஏன் வருந்துகின்றனை  என்று கூறினை; அவ்வுண்மையை அறியாதவர்க்கு அத்தன்மையாகவேதான் காணப்படும்; நம் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கொள்கை உடையவனாயிருந்து, இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை மடுப்பானாயினான்; இங்ஙனம் பிறள் ஒடுத்திபால் அன்பு வைத்தால் என்னிடத்தில்  அவனுக்கு எவ்வாறு அன்பு தோன்றும்..? அன்பு என்பது இல்லாதவழி என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும்  யான் அவனைத் தழுவிக்கொள்வதனாலும் யாது பயன் விளையும்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக