செவ்வாய், 18 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1329


திருக்குறள் -சிறப்புரை :1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா. ----- ௩உ ௯
ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த தலைவி ஊடல் கொள்வாளாக ; யாம் இவளின் ஊடல் தீர்க்க வேண்டி நிற்க,  கூடும் காலம்வரை இரவும் வளரட்டும்.
“……………….. . ………. தோழி
சுனைபூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கில் படுகிளி ஓப்பியும்
காலைவந்து மாலைப் பொழுதில்
நல்லகம் நயந்து தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.”----- குறுந்தொகை.
 தோழி…! மலைநாடன், பகலில் வந்து, சுனையில் பூத்த குவளை மலர்களை மாலையாகத் தொடுத்து நினக்குத் தந்தனன் ; தினைப் புனத்தில் தினைக்கதிர்களில் படியும் கிளிகளை நம்மோடு சேர்ந்து ஓட்டினான்; இவ்வாறு நமக்கு எளியனாகிய அவன் மாலைப் பொழுதில், நின்னுடைய நல்ல மார்பினை அடைய விரும்பி, வருந்தி, அக்கருத்தைச் சொல்லத் துணிவின்றி மெலிந்தனன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக